என் பாட்டனுக்கு நன்றி
முதல் பதிவு என்பதால் திருக்குறளில் இருந்து துவக்குவது என்ற முடிவோடு,
ஒரு (முதல்) குறளின் அறிமுகத்தோடு,
வள்ளுவரின் முதல் குறள் தான் எனது முதல் குறளும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பகவன் முதற்றே உலகு.
எழுத்துகளுக்கு அகரம் முதன்மை, , உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதி பகவன் முதன்மை.
இங்கு நான் சொல்லவருவது எனது (நமது ) முன்னோரின் பெருமையை.
உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கும் இடம் குமரிக்கண்டம். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் தமிழ் பிறந்தது சுமார் இருவதாயிராம் ஆண்டுகளுக்கு முன்னால்.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
எனவே இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
உலக மொழிகளுக்கு அணைத்துக்கும் நம் தமிழ் மொழி தான் - தாய் மொழி என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எதற்கும் சான்று வேண்டும் அல்லவா - இதோ
நன்றி,
என்றும் அன்புடன்
சந்தோஷ் .
No comments:
Post a Comment