More than a Blog Aggregator night writter: இட்லி ஓர் பார்வை

Friday, October 31, 2014

இட்லி ஓர் பார்வை

இட்லி ஓர் பார்வை

மிருதுவான இட்லிக்கு 3க்கு 1னு சொன்னா அம்மா

மிருதுவான இட்லிக்கு 4க்கு 1னும், கொஞ்சம் சோடா உப்பும்னு,  சொன்னா ஹோட்டல் மாஸ்டர்

இட்லிக்கு பால் கேட்டா குழந்தை

இட்லிக்கு சாம்பார், மூணு சட்னி மற்றும் இட்லி பொடியும் கேட்டால் ஹோட்டல் கஸ்டமர்

இட்லி மட்டும் சாப்பிடுங்கனு சொன்னா டாக்டர்

இட்லி மாசம் ஒரு முறை மட்டும் சாப்பிட்டா NRI கள் அல்லது பரம ஏழை

இட்லியை சாம்பாரில் முக்கி ஸ்பூனில் சாப்பிட்டா வடஇந்தியன்

அம்மாவின் இட்லியை குறை சொல்பவன் கல்யாணத்துக்கு காத்திருக்கும் பிரம்மசாரி

அம்மாவின் இட்லிக்கு ஏங்குபவன் வீட்டை விட்டு வெளியூரில் தங்கியிருக்கும் பிரம்மசாரி

இட்லியின் வகைகளை மட்டும் 5 நிமிஷம் சொன்னா ஹோட்டல் சர்வர்

இட்லியில் பீர் ஊத்தி அடிச்சது  'சீயான்' சாமி னா - அவருக்கு சொன்னது ஹரி

இட்லி மட்டும் கேட்பவன் "கஞ்சன்" - ஹோட்டல் முதலாளியின் பார்வையில்

ஒரு ரூபாயில் இட்லி தந்தா - தமிழகத்தின் அம்மா

இட்லியின்  ingerdientகூட தெரியாட்டாலும், திங்க மட்டும் தெரிஞ்சிருந்தா நவ நாகரிக நங்கை

இட்லியில் இன்னும் எவ்வளவோ விஷயம் இருந்தாலும், இட்லியை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தாலும் கீழ உள்ளது ஏத்துக்கும்  படியாய் இருக்கு.........

இட்லியிலும் intelligentயை புகுத்தி குமட்டில் குத்தி அறிவுரை போல் சொன்னா M.R. ராதா

நீராவியை வெச்சு ரயில் விடலாமா ராக்கெட் விடலாமானு யோசிக்கிறான் வெள்ளக் காரன் ஆனா அதை வச்சி இட்லியும் புட்டும் மட்டும் செஞ்சி சாப்பிட்டுகிறான் நம ஆளு


No comments:

Post a Comment